Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பாழடைந்த கிணற்றில் மனித எலும்புக்கூடு…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…. பரபரப்பு சம்பவம்…!!

பாழடைந்த கிணற்றிலிருந்து மனித எலும்புக்கூடு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் டி.வி.டி காலனி செந்தூரன் நகரில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கிணறு இருக்கிறது. இந்த கிணறு தற்போது குப்பைகள் நிறைந்து பாழடைந்து காணப்படுவதால் கழிவு நீரும் தேங்கி கிடைக்கிறது. நேற்று கிணற்றில் மனித எலும்புக்கூடு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு வீரர்களை வரவழைத்து கயிறு கட்டி மனித எலும்புக்கூடை மீட்டனர். இதனை அடுத்து எலும்புக்கூடு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் தினமும் இரவு நேரத்தில் கிணற்றுக்கு அருகே ஒரு மர்ம நபர் மது அருந்தி வந்தது தெரியவந்தது. கடந்த சில நாட்களாக அவர் மது அருந்த வரவில்லை. எனவே மீட்கப்பட்ட எலும்புக்கூடு அவருடையதா என போலீசார் சந்தேகப்படுகின்றனர். மேலும் அந்த நபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீசி சென்றார்களா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |