உக்ரைன் நோக்கி ஏவிய ஏவுகணை ரஷ்யாவை தாக்கிய சம்பவம் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 6 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று ரஷ்ய வீரர்கள் எஸ் -300 என்ற 6 ஏவுகணைகளை உக்கிரைன் நோக்கி ஏவினர். ஆனால் விண்ணில் ஏவப்பட்ட 6 ஏவுகணைகளில் ஒரு ஏவுகணை திடீரென கட்டுப்பாட்டை இழந்து திரும்பி ரஷ்யாவில் உள்ள பெல்கோரோட் பகுதியை தாக்கியுள்ளது.
இந்த பகுதி உக்கிரேன் எல்லையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் ஏவுகணை தாக்குதலால் இந்த பகுதி சேதம் அடைந்துள்ளது. ஆனால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. இந்நிலையில் ஏவுகணை சொந்த நாட்டிலே விழுந்து பாதிப்பை ஏற்படுத்திய சம்பவம் ரஷ்ய அரசையும், அந்நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.