தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நளினி. இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகையாக இருக்கும்போதே நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அருண் என்ற மகனும், அருணா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 2010-ஆம் ஆண்டு நளினியும், ராமராஜனும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இவர்களின் பிரிவுக்கு நடிகை அபிதா என்று அப்போது வதந்திகள் பரவியதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சேது படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த அபிதா சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார்.
அந்த பேட்டியின் போது தன்னுடைய வாழ்வில் நடந்த பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசினார். அப்போது நடிகர் ராமராஜனுடன் நான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் நளினியும், ராமராஜனும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர். இவர்களின் விவாகரத்துக்கு நான்தான் காரணம் என்று சில செய்தித்தாள்களில் கூட செய்திகள் வெளிவந்தது. இதனால் நான் பல மாதங்கள் மிகவும் வேதனைப்பட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் திருமதி செல்வம் என்ற சீரியலுக்குப் பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த அபிதா தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மாரி என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.