Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில்…. மாணவர்களுக்கு வெளியான செம சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீதம் இடங்களில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உயர் கல்வித் துறை கட்டுப்பாட்டில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.இந்த கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இருந்தாலும் பல பாடப்பிரிவுகளில் மாணவர்கள் தங்களுக்கு இடம் கேட்டு கல்லூரிகளில் விண்ணப்பித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக அரசு கல்லூரிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக 20 சதவீதம் இடங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மேலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும் சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதமும் கூடுதல் இடங்களில் மாணவர்களை சேர்க்கலாம் எனவும் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |