புதிதாக 10 மாவட்டங்களில் முதியோர் இல்லங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநில சமூக, பாதுகாப்பு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் பல்ஜித் கௌர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மலேர்கோட்லா, எஸ்ஏஎஸ் நகர், சகித் பகத்சிங் நகர், குர்தா ஸ்பூர், டர்ன் தரன், பாட்டியாலா, கபுர்தலா, ஜலந்தர், பதேகர் ஷாகிப், பதிந்தா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் புதிதாக முதியோர் இல்லங்கள் அமைக்கப்படும்.
இந்த முதியோர் இல்லங்களில் 25 முதல் 150 பேர் வரை தங்கலாம். இந்த நிறுவனங்களுக்கு செஞ்சிலுவைச் சங்கங்கள், அறக்கட்டளைகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் நிதி உதவிகள் வழங்குவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் முதியவர்களை பாதுகாப்பதற்காக முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.