Categories
மாநில செய்திகள்

“கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கை”….. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!

20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவர்கள் பொறியியல் படிப்புகளை தாண்டி அதிக அளவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டியுள்ளனர். இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கு அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அந்த அளவிற்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடம் இல்லாத காரணத்தினால் கூடுதலாக 20 சதவீதம் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீதம் மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதம், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதம் கூடுதலாக மாணவர் சேர்க்கையை சேர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |