அமெரிக்காவில் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை பெண் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு பெண் காரில் சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அந்த காரை மறித்து அதிலிருந்த பெண்ணை பலமாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து அந்த மர்ம நபர் சாலையில் நின்ற மற்றொரு பெண்ணையும் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அந்த பெண் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மர்ம நபர் மீது 2 முறை சுட்டுள்ளார். மேலும் அந்த பெண் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அந்த மர்ம நபரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.