Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. கவலைய விடுங்க…. அடுத்த மாதத்தில் இருந்து குறைந்த விலையில்….. நிம்மதி அறிவிப்பு….!!!!

பெண்களுக்கு மார்பகம், கருப்பை, கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்படுதற்கான வாய்ப்புகள் உண்டு. இதில் கர்ப்பப்பை வாயில் தொற்று ஏற்படும் போதே கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோய் ஏற்படுவதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட முடியும். இந்தப் புற்றுநோய் வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது. ஆனால் பிற புற்றுநோய்களை பொறுத்தமட்டில், நோயால் பாதிக்கப்பட்ட பின்பே சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நாள் வரை, கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான செர்வொவெக்  தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து செர்வொவெக் தடுப்பூசிக்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெண்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய் வராமல் தடுப்பதற்காக உள்நாட்டிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி சில மாதங்களில் குறைந்த விலையில் பொது மக்களுக்கு கிடைக்கும் என்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். அதாவது 200 முதல் 400 விலையில் அடுத்த சில மாதங்களில் இந்த தடுப்பூசி கிடைக்கும். அரசுடன் ஆலோசனை செய்த பிறகு இறுதியில் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |