Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்து வெளியேறிய தொழிலாளி…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி  தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்சாத்தமங்கலம் பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாய தொழிலாளியான  பிரபாகரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில்  பிரபாகரன்  கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் 2  நாட்களாக  பிரபாகரன் வீடு திரும்பவில்லை. இதனை  பார்த்து  அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பிரபாகரனை பல இடங்களில் தேடியுள்ளனர்.

ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் பிரபாகரன் வேலை செய்ய வந்த விவசாய நிலத்தில் மின் மோட்டார் அறையில்   பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரபாகரனின் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரபாகரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம்  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |