Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அலறியடித்து ஓடிய போலீசார்…. நள்ளிரவில் உலா வந்த காட்டு யானை…. வனத்துறையினரின் போராட்டம்….!

காவல் நிலையம் அருகே காட்டு யானை உலா வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் காவல் நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று உலா வந்தது. இதனை பார்த்ததும் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். அவர்கள் காவல் நிலையத்திற்குள் புகுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |