Categories
உலக செய்திகள்

சந்திரனுக்கு ஆய்வுக்கலன் அனுப்பும் நாசா… எப்போது?… வெளியான தகவல்…!!!

நாசா விண்வெளி ஆய்வு மையம் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் சோதனை முயற்சிக்கான  ஆய்வுக்கலனை நாளை மறுநாள் அனுப்பவுள்ளதாக தெரிவித்திருக்கிறது.

அமெரிக்க நாட்டின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதற்கான சோதனை முயற்சியாக அந்த துணைக்கோளுக்கு ராக்கெட் மூலமாக ஆய்வுக் கலன் நாளை மறுநாள் அனுப்பப்படவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

இதற்கு முன்பு, கடந்த திங்கட்கிழமை அன்று நாசா மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் சோதனை முயற்சியை மேற்கொண்டது. அப்போது திடீரென்று இயந்திரத்தல் பழுது ஏற்பட்ட காரணத்தால் ராக்கெட் பாதியில் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |