காதலன் வீட்டில் தகராறு செய்து கொண்டிருந்த பெண்ணை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது போலீஸ்காரரின் கையை கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த செல்வி என்ற பெண் திருவெற்றியூரை சேர்ந்த ரேவேந்திர குமார் என்பவரை காதலித்து வந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் செல்வி தேவேந்திரகுமாரிடம் தொடர்ந்து பணம், நகை கேட்டு தொந்தரவு செய்து வந்த காரணத்தினால் அவர்கள் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.
இதனால் கோபமடைந்த செல்வி திருவெற்றியூரில் உள்ள காதலன் வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராறு ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாத ரேவேந்திர குமார் காவல்துறைக்கு புகார் அளித்தார். புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தகராறில் ஈடுபட்டு வந்த செல்வியை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அப்போது போலீஸ்காரரின் சட்டையை பிடித்து கிழித்து அவரது கையை கடித்து வைத்துள்ளார். ஒரு வழியாக போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.