Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்… கிணற்றில் குளிக்க சென்ற மாணவன் பலி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஆர்க்வாடி என்னும் பகுதியைச் சேர்ந்த ஐயனார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன்கள் சரத்குமார் (15), சிவக்குமார் (13) ஆகிய இரண்டு பேர் உள்ளனர். இதில் சரத்குமார் மூங்கில் துறை பட்டியல் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பும், சிவகுமார் ஆற்காவடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்ற காரணத்தினால் சரத்குமாரும் சிவக்குமாரும் அதே பகுதியில் உள்ள அவர்களது விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இருவரும் கிணற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென சிவக்குமார்  மூழ்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரத்குமார் வெளியே வந்து சிவகுமார் தண்ணீரில் மூழ்கியது பற்றி அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். உடனடியாக அவர்கள் கிணற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் அந்த சிறுவனை மீட்க முடியவில்லை. இந்த நிலையில் இது பற்றி அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஐந்திற்கும் மேற்பட்ட மின்மோட்டார் மூலம் கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். அப்போது சிவகுமார் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து சிவகுமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது பற்றி மூங்கில் துறை பட்டு உலகநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |