செய்தியாளர்களை சந்தித்து பேசிய கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி காவல் நிலையத்தில் 1044 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கலின் நடமாட்டத்தை குறைப்பதற்கு ஆபரேஷன் விடியல் தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் படி இதுவரை இந்த வருடம் 99 குற்ற வழக்குகள் பதியப்பட்டு 212 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அரசு பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். மேலும் மாணவர்களுக்கு 1 ரூபாய் சிறப்பு பேருந்து இனி இலவசமாக இயக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.