Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 இல்ல 2 இல்ல ரூ.37 லட்சம்…. சோதனையில் சிக்கிய வாலிபர்…. சென்னையில் பரபரப்பு….!!!!!

சென்னை எம்ஜிஆர் சென்டிரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரோகித்குமார் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மேற்கு வங்காளத்திலிருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். இதையடுத்து அவரிடமிருந்த பையை சோதனை நேர்கொண்டபோது, அவற்றில் ரூபாய்.17 லட்சம் இருந்தது.

அத்துடன் வாலிபர் தன் உடலிலும் ரூபாய்.20 லட்சத்தை கட்டி மறைத்து வைத்திருந்தார். அப்பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவரிடமில்லை. அதன்பின் அவரிடமிருந்த ரூபாய்.37 லட்சத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து விசாரணையில் அவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சங்கர் ஆனந்த்ராவ் ஷின்டே (30) என்பது தெரியவந்தது. பின் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய்.37 லட்சத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

Categories

Tech |