Categories
சினிமா

பெரியார் சிலை குறித்து பேசிய கனல் கண்ணன் வழக்கு….. காவல்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘சேரன் பாண்டியன்’ படத்தின் மூலம் சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் கனல் கண்ணன். அதனை தொடர்ந்து நாட்டாமை, தேவா, முத்து, பூவே உனக்காக, அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களில் இவர் சண்டை பயிற்சியிலராக பணியாற்றியுள்ளார். இவர் பணியாற்றும் படங்களில் அவ்வபோது சண்டை காட்சிகளில் சிறு சிறு வேடங்களில் தோன்றி அனைவராலும் அறியப்பட்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கடல் கண்ணன் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதில் உலகம் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை பாண்டிச்சேரியில் வைத்து சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை எழுப்பூர் நீதிமன்றமும் சென்னை மாவட்ட முதன்மை சென்ன்சு நீதிமன்றமும் அடுத்தடுத்து தள்ளுபடி செய்த.து இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கனல் கண்ணன் ஜாமின் மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு நீதிமன்ற முத்திரை விட்டது. மேலும் ஜாமின் மனு மீதான விசாரணையை வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Categories

Tech |