அமெரிக்காவில் ஆதரவற்றோர் இல்லத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கெண்டகி மாகாணம் ஹென்டர்சன் நகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்குள் புகுந்து மர்மநபர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்தவர்கள் உயிர் பயத்தில் அங்கும் இங்கும் அலறியபடி ஓட்டம் பிடித்துள்ளனர். இருந்த போதிலும் மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டில் நடத்தியதில் இரண்டு பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர்.
மேலும் இரண்டு பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதற்கிடையே துப்பாக்கி சூடு பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆதரவற்றோர் இல்லத்தை சுற்றி தங்களின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து கொலையாளியை போலீச துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டின் பின்னணி பற்றி அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.