Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐயோ அம்மா!…. நடுவானில் சென்று கொண்டிருந்த விமானத்தில் கேட்ட சத்தம்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இருந்து துர்க்கிஸ் ஏர்லைன்ஸ் போயிங் ரக பயணிகள் விமான மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு 326 பயணிகளுடன் சென்றது. இந்த விமான நேற்று மதியம் சென்னை வான்வழி வழியாக கடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது விமானத்தில் பயணம் செய்த மலேசியாவில் சேர்ந்த நுர்பாரா ஆஷின்குன்(26) என்ற பெண்மணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனை பார்த்த பணிபெண்கள் உடனடியாக விமானிக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையோடு தொடர்பு கொண்ட விமானி விமானத்தை சென்னையில் அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார். அதனை தொடர்ந்து சென்னை விமான நிலை கட்டுப்பாடு அதிகாரிகள் டெல்லியில் உள்ள தலைமை கட்டுப்பாடு அறைக்கு தகவல் அளித்தனர்.

அதன் பிறகு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க அனுமதி வழங்கினர். விமானம் தரையிறங்கியது சென்னை விமான நிலைய மருத்துவ குழு விமானத்துக்குள் எரி பெண்ணே பரிசோதித்த போது அந்த பெண்ணுக்கு குறைப்பிரசவம் ஏற்பட்டு குழந்தை இறந்த நிலையில் பிறந்து இருந்ததை கண்டனர். இதனையடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள், சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளோடு தொடர்பு கொண்டனர். அந்த பெண்ணுக்கும் அவருடன் வந்த உறவினருக்கும் மட்டும் மனிதாபிமான அடிப்படையில் இரண்டு பேரை விமானத்தில் இருந்து இறக்கி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணுக்கு இறந்த நிலையில் பிறந்த சிசுவின் உடலை விமானத்தின் இருந்து கீழே இறக்க அதிகாரிகள் முதலில் அனுமதி மறுத்த நிலையில் பின்னர் கொண்டு செல்ல அனுமதித்தினர். அதன் பின்னர் மீதமுள்ள 324 பயணிகளுடன் மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூர் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |