கன்னட சினிமா நட்சத்திரங்கள் ஆன சுந்தர் பிரமிளா தம்பதியின் மகள் மேக்னாராஜ். இவர் தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார். பிரபல கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை 10 வருடங்களாக காதலித்து கடந்து 2018 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் வருடம் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். சிரஞ்சீவி சர்ஜா இறக்கும் போது கர்ப்பிணியாக இருந்த மேக்னா ராஜுக்கு அடுத்த சில மாதங்களில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில் மேக்னராஜுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. இதனை அடுத்து தன்னுடைய கவனம் எல்லாம் தனது மகனின் எதிர்காலத்தை பற்றி தான் இருக்கிறது என விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் நடிகை மேக்னராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில போட்டோக்களை ஷேர் செய்து வாயடைக்க வைத்துள்ளார். அதாவது மறைந்த தனது கணவர் மற்றும் தனது மகன் ராயன் போன்றோரின் பெயரை கையில் பச்சை குத்தி இருக்கிறார். அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து எனக்கு எப்போதும் இவர்கள்தான் என கேப்சன் கொடுத்திருக்கின்றார்.