Categories
மாவட்ட செய்திகள்

“கோவிலுக்கு சொந்தமான ஒரு கோடி மதிப்பிலான இடம் மீட்பு”.. அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!!!!!

மயிலாடுதுறை காவிரி நகரில் சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான சித்தர் காடு திருஞானசம்பந்தர் கோவிலின் உப கோவிலாகும். சக்தி மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 1,228 சதுர அடி பரப்பளவில் உள்ள இடம் காவேரி நகர் பகுதியில் அமைந்திருக்கின்றது. இந்த இடத்தில் ஒருவர் கட்டிடம் கட்டி சாக்கு குடோனாக பயன்படுத்தி வந்திருக்கின்றார். இந்த நிலையில் இந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக அறநிலையத்துறை இணை ஆணையருக்கு புகார் வந்துள்ளது.

இது பற்றி விசாரணை மேற்கொண்ட போது அந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து மயிலாடுதுறை அறநிலையத்துறை உதவியாளர் முத்துராமன் தனி தாசில்தார் விஜயராகவன் தலைமையில் அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த கட்டிடத்தை பூட்டி சீல் வைத்துள்ளனர். மீட்கப்பட்ட இடத்தில் சந்தை மதிப்பு ஒரு கோடி என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் முறையான அறிவிப்பு இல்லாமல் கட்டிடத்தை பூட்டி சீல் வைத்ததாக பாட்டாளி மக்கள் கட்சியினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்களிடம் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையனிடம் மனு அளிக்குமாறு அதிகாரிகள் கூறி சென்றுள்ளனர்.

Categories

Tech |