Categories
மாநில செய்திகள்

அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு!…. புதிய பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை ஆடியோ?….!!!!

நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜன் கார் மீது வீசப்பட்ட செருப்பு சம்பவத்திற்கு முன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க மாவட்டத் தலைவருடன் பேசிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவவீரா் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற ஆகஸ்ட் 13ம் தேதி மதுரை விமான நிலையம் வந்தார். இந்நிலையில் அங்கு தி.மு.க மற்றும் பா.ஜ.க இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அங்கிருந்து புறப்பட்டார். அப்போது பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணியை வீசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இச்சம்பவத்திற்கு முன்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, புற நகர் மாவட்ட தலைவரான சுசீந்திரனிடம் பேசிய ஆடியோவானது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், ஏற்பாடுகள் தயாராக இருக்கிறதா, நம் ஆட்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என அண்ணாமலை சுசீந்திரனிடம் கேட்க, அதற்கு அவர் ஆயிரம் பேர் இருப்பதாகக் கூறுகிறார். இதனை வேறுமாதிரி செய்ய வேண்டும். இதனை எப்படி அரசியல் செய்ய வேண்டும் என யோசிக்கிறேன்” என்று பேசியுள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |