Categories
மாநில செய்திகள்

அது கலைஞர் பாணி… இது என் பாணி… வேற லெவலில் பன்ச் பேசிய முதல்வர் ஸ்டாலின்…!!!!!!!

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கள்ளிப்பட்டியின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது ஈரோடு மாவட்டத்தில் கருணாநிதியின் மூன்றாவது சிலையை நான் இப்போது திறந்து வைத்திருக்கின்றேன். இதே ஈரோட்டில் மூன்று அல்லது 300 சிலைகளை கூட வைக்கலாம். அந்த அளவிற்கு கருணாநிதியின் ஊனோடும் உயிரோடும் உயிரோடு கலந்து இருக்கிறது. பெரியார் பிறந்த இடம் மட்டுமல்லாமல் கருணாநிதி சமூக பேராளியாக உருவான இடம் ஈரோடு. எனது வாழ்நாளில் இந்த மண்ணில் கருணாநிதியின் சிலையை திறந்து வைப்பது எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகின்றேன். கருணாநிதியைப் போல பேச எழுத உழைக்க முடியாது என்றாலும் அவர் நினைத்த காரியங்கள் அனைத்தையும் முடிக்க முடியும் என உறுதி எடுத்துக் கொண்டுதான் ஆறாவது முறையாக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்றிருக்கின்றோம்.

இப்போதெல்லாம் கட்சி தொடங்கிய உடனே அல்லது தொடங்குவதற்கு முன்பாகவே அடுத்தது நாம் தான் ஆட்சி அமைப்போம் நான் தான் முதல்வர் என சொல்லிக் கொண்டிருக்கும் சில அரசியல்வாதிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் 1949 இல் திமுக தொடங்கிய நிலையில் 1957ல் தான் தேர்தல் களத்திற்கு வந்துள்ளது. அதுவும் திருச்சி மாநாட்டில் அண்ணா வாக்கெடுப்பு நடத்தி தான் முடிவு எடுத்துள்ளார். 1957 கலங்கண்டு 15 இடங்களில் வெற்றி பெற்றோம். அதன் பின் 1962ல் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தும் 1967-ல் தமிழக வரலாற்றின் இதுவே இல்லாத அளவிற்கு 184 இடங்களில் வெற்றி பெற்று அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்தோம். இந்த நிலையில் அண்ணாமறைவிற்கு பின் 1921 ஆம் வருடம் கருணாநிதி தேர்தலில் வென்று ஆட்சி அமைத்துள்ளார்.

அதன் பின் ஐந்து முறை ஆட்சி பொறுப்பை ஏற்று உள்ளார். 95 வயதில் உடல் நலிவுற்று இருந்தாலும் சக்கர நாற்காலியில் அமர்ந்து சுழன்று சுழன்று பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். அவரது வழியில் இன்று ஆறாவது முறையாக திமுக ஆட்சி அமைத்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் சொன்ன அத்தனை உறுதிமொழிகளையும் திமுக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. மேலும் உங்களது உழைப்பால் சிந்திய ரத்தத்தில் இந்த பொறுப்பில் நான் அமர்ந்திருக்கின்றேன். உங்கள் உத்தரவை ஏற்று இந்த பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றேன். திராவிட மாடல் ஆட்சியை தொடர்ந்து நடத்துவோம் என உறுதி மொழியை இந்த நிகழ்ச்சியின் மூலமாக ஏற்கிறேன் என ஸ்டாலின் உருக்கமாக பேசியுள்ளார். சிலை திறப்பு விழாவில் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சோமு முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் மு பி சாமிநாதன், முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாசலம், என் சுப்புலட்சுமி ஜெகதீசன் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் போன்றோர் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |