Categories
உலக செய்திகள்

“தனது மரணத்தை போலியாக தயார் செய்த பெண் எழுத்தாளர்”… நாடு கடத்தும் அமெரிக்கா…!!!!!

தனது சொந்த மரணத்தை போலியாக உருவாக்கி தனது மகனை கடத்தியதற்காக கனடிய எழுத்தாளர் டான்வாக்கரை அமெரிக்கா நாடு கடத்த போகின்றது. கனடாவின் எல்லையை தாண்டுவதற்காக தனது தோழியின் அடையாளத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட வாக்கர் வீட்டு துஷ்பிரயோகத்திலிருந்து தப்பிக்க விரும்பியதால் நாட்டை விட்டு வெளியேறியதாக கூறியுள்ளார். சஸ்காட்செவன் மாகாணத்தில் உள்ள ஓகனீஸ் க்ரீ நேசனை சேர்ந்த பழங்குடி எழுத்தாளரான வாக்கு ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போயிருந்தார். அவரும் அவரது மகனும் தெற்கு சஸ்காட் செவன்ஆற்றில் மூழ்கி இறந்து விட்டதாக அச்சத்தை தூண்டும் விதமாக அவரது கைவிடப்பட்ட பிக்கப் ட்ரக் சஸ்கடூன் நகரில் உள்ள பூங்காவில் காணப்பட்டிருக்கிறது. அவர்கள் தொலைந்து போய் இருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம் எனும் கவலையில் அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க Go fund me பிரச்சாரம் அமைக்கப்பட்டது மற்றும் கிட்டத்தட்ட 50,000 கனடிய டாலர்களை திரட்டியது.

ஆனால் சமீபத்தில் அவர் வேறு ஒரு அடையாளத்துடன் தனது மகனையும் கூட்டிக்கொண்டு அமெரிக்காவிற்குள் நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அவர் அமெரிக்க அதிகாரிகளால் நாடு கடத்தப்பட இருக்கின்றார். அமெரிக்காவில் உள்ள உள்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி வாக்கர் தனது 7 வயது மகனை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான கடத்தல் திட்டம் மற்றும் எல்லையைத் தாண்டி ஒரு நண்பரின் அடையாளத்தை திருடியதற்காக ஓரிகானில் கைது செய்யப்பட்டுள்ளார். தனக்கும் தனது மகனுக்கும் பாதுகாப்பு இல்லை என பயப்படுவதாக கூறிய வாக்கர் சஸ்காட்செவன் நீதி அமைப்பு குடும்ப சட்ட அமைப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு போன்றவற்றால் தான் தோல்வி அடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இறையாண்மை பூர்வீக நாடுகளின் கூட்டமைப்பு எஃப் எஸ் ஐ என் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி தனது மகனுக்காக நீண்ட காவல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் காணாமல் போன படுகொலை செய்யப்பட்ட பழங்குடி பெண்களின் தொடர்ச்சியான நெருக்கடியை நிவர்த்தி செய்ய தவறியதை விமர்சிக்கும் வாக்கர் அவரது புத்தகமான the prairie chicken dance tour க்கு மதிப்பும் மிக்க கனடிய இலக்கிய விருது தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு பெண் இதை விட்டால் வேறு வழியில்லை என முடிவெடுத்து இந்த கடுமையான நடவடிக்கையை செய்திருப்பது மனவேதனை அளிக்கிறது என எஃப் எஸ் ஐ என் தலைவர் பாபி கோமரூன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |