இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூர் வெங்கடாபுரத்தில் கணேசன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யபிரியா(22) என்ற மகள் இருந்துள்ளார். இவர் பி.டெக் படித்து முடித்துள்ளார். இந்நிலையில் சத்யபிரியா மேற்படிப்பு படிக்க விரும்பியுள்ளார். ஆனால் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சத்யப்ரியா நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.