திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்தனர்.
மலேசியாவில் உள்ள கோலாம்பூரில் இருந்து 253 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விவரங்கள் வெளியாகவில்லை.