சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள மளிகை கடையில் இன்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென்று சோதனை செய்தனர். அதில் மளிகை கடையில் இருந்த சமையல் எண்ணெய் மற்றும் மற்ற எண்ணெய்களின் தரத்தை ஆய்வு மேற்கொண்டனர். கடைகளில் கீழ்தளத்திலும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் தரம் மற்றும் சமையல் எண்ணெய்கள் டின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு துறையின் சென்னை மண்டல நியமன அலுவலர் சதீஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தெரிவித்ததாவது “எண்ணையை பேக்கிங் செய்து விற்பனை செய்ய தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சரியான முறையில் ஷவர்மா உணவு தயாரிக்கப்பட்டு இருந்தால் சாப்பிடலாம்” என்று தெரிவித்துள்ளார்.