Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சொத்து தகராறு…. கொலை செய்த பெண்..!!

சொத்து தகராறில் விவசாயி விவசாயி மனைவியையும் பெண் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூரில் உள்ள கிருஷ்ணபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் வித்யா தம்பதியினர்.. முருகேசனின் அண்ணன் மனைவி சித்ரா. சித்ராவின் கணவரும் 3 மகன்களும் இறந்துவிடவே மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார் சித்ரா. இந்நிலையில் சித்ராவிற்கு முருகேசனிர்க்கும் சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது.

தகராறின் காரணமாக கோபம்கொண்டு சித்ரா முருகேசனை கொலை செய்துவிட முடிவு செய்து இரவு முருகேசனும்  விஜயாவும் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டிற்குள் வந்த சித்ரா முருகேசனின் கழுத்தில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் முருகேசன் சத்தமிட முருகேசனின் அலறல் சத்தம் கேட்டு விஜயா எழுந்த பின்னர் சித்ராவை தடுக்க முயன்றுள்ளார்.  இதனால் விஜயாவையும் சித்ரா வெட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து சித்ரா தப்பி ஓடியுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த முருகேசனை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் விஜயாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு முருகேசனை கொலை செய்த சித்ராவை கைது செய்தனர்.

Categories

Tech |