ஆபத்தை உணராமல் மாணவர்கள் பேருந்தின் பின்புற ஏணியில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பட்டிமணியக்காரன் பாளையம் மற்றும் வேமாண்டம்பாளையம் ஆகிய பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று மாலை புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து நம்பியூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 2 பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் பயணம் செய்துள்ளனர்.
அவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்தின் பின்புறம் இருக்கும் ஏணியில் தொங்கியபடி பயணம் செய்ததை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பேருந்து ஓட்டுநர் மற்றும் கண்டக்டரிடம் படிக்கட்டு மற்றும் பின்புற ஏணியில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதாக வாகன ஓட்டிகள் கூறியுள்ளனர். ஆனாலும் பேருந்து நிற்காமல் அப்படியே சென்றது.