கமலா தேவி ஹாரிஸ் முதல் பெண் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரில் 1964-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி கமலாதேவி ஹாரிஸ் பிறந்தார். இவரது தந்தை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்துள்ளார். மேலும் இவரது தாயார் புற்றுநோய் ஆராய்ச்சியாளராக இருந்துள்ளார். இவரது தங்கையான மாயா பொதுக்கொள்கை வழக்கறிஞராக இருந்துள்ளார். இந்நிலையில் கமலா தேவி ஹாரிஸ் கடந்த 1986-ஆம் ஆண்டு பொருளாதார பிரிவில் பட்டம் பெற்றார்.
அதன் பிறகு 1989-ஆம் ஆண்டு ஹேஸ்டிங்ஸ் கல்லூரியில் சட்டம் பட்டமும் பெற்றார். இதனையடுத்து 1990 முதல் 98 வரை மாவட்ட வழக்கறிஞராகவும், வன்முறை, பொருள் கடத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற வழக்குகளில் வாதாடி நற்பெயர் பெற்றார். அதன்பின்னர் கமலாதேவி ஹாரிஸ் 2010-ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் ஆண்டில் ஜெனரலாக ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதனால் முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார். இதனையடுத்து 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனநாயக தேசிய மாநாட்டில் கமலாதேவி ஹாரிஸ் ஒரு மறக்க முடியாத உரையை நிகழ்த்தினார். இந்நிலையில் 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஹாரிஸ் செனட்டில் முதல் இந்திய அமெரிக்கர் மற்றும் 2-வது கறுப்பின பெண்மணி ஆனார். இந்நிலையில் 2016-ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரஷ்ய தலையீடு இருப்பதாக கூறப்படும் உளவுத்துறை குழுவின் முன் சாட்சியமளித்துக்கொண்டிருந்த ஜெஃப் செஷன்ஸ் அவரை ராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் 2019-ஆம் ஆண்டு அவர் ஒரு ஜனநாயக கட்சியை நடுவதாக அறிவித்தார். மேலும் இவர் அவரது தேர்தல் வாய்ப்புகளுக்கு முக்கியமானதாக கருதப்பட்ட ஒருவரை அவரது துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் துணையாக தேர்ந்தெடுக்க அழைப்பு விடுத்தார். மேலும் இவர் ஒரு பெரிய கட்சியின் தேசிய டிக்கெட்டில் தோன்றிய முதல் கருப்பின பெண்மணி ஆவார்.