ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டின் அணு உலைக்கு அருகே மீண்டும் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப் போர் தொடங்கப்பட்டு நாளையுடன் ஆறு மாதங்களை தொடுகிறது. எனினும் போர் நிறைவடைவதற்கு எந்த அறிகுறிகளும் இல்லை. ஒவ்வொரு நாளும் போர் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியா என்னும் அணு உலைக்கு அருகே ரஷ்யப்படையினர் நேற்று தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணு உலையிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நிகோபோல் என்னும் இடத்தில் ரஷ்யப்படையினர் தொடர்ந்து பீரங்கி குண்டுகளை எறிந்து தாக்குதல் மேற்கொண்டனர். எனினும், தற்போது வரை இந்த தாக்குதலுக்கு ரஷ்யா எந்தவித விளக்கமும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.