காவல்துறையில் பணியாற்றும் மாணிக்கவேல் என்பவர் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, காவல்துறை குடியிருப்பில் அவருக்கு வழங்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி அரசு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆர்டர்லி முறை மற்றும் அரசு அதிகாரிகள் வாகனங்களுக்கு அடிக்கும் ஸ்டிக்கர் மற்றும் சொந்த வாகனங்களில் அரசு முத்திரை ஆகிவை தொடர்பான வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது ஆர்டர்லி முறை ஒழிப்பு குறித்து தமிழக அரசு மற்றும் டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்திருந்த நீதிபதி, இந்த வழக்கினுடைய உத்தரவு இன்றைய தினம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்த போது, ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமையும், கண்ணியத்தையும் உறுதிப்படுத்தும் வகையில், அவர்கள் எந்த பணிக்காக நியமிக்கப்பட்டார்களே அந்த பணியை மட்டுமே அவர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்.
மேலும் ஆர்டர்லி ஒலிக்கும் முறை குறித்து கடந்த 1979 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பின்பற்றி ஆர்டர்லி உள்ள காவலர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் எனவும், அலுவலக உதவியாளர் அல்லது இருப்பிட உதவியாளர் பணிகளை உருவாக்கும் படி தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கலாம் என டிஜிபிக்கு அவர் அறிவுறுத்தலை வழங்கி இருக்கிறார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் குமரேசன் ஆர்டலிகளை பயன்படுத்துவதில்லை எனவும், மேலும் 265 அதிகாரிகள் உத்தரவாதம் வழங்கி உள்ளதாக தெரிவித்ததுடன், முதலமைச்சர நடத்திய கூட்டத்தை தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகளும் கூட்டங்களை நடத்தியுள்ளதாகவும், ஆர்டர்லி ஒழிப்பு முறையில் உயர்நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாக பின்பற்றப்படும் எனவும் உறுதி அளித்தார்.
நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன் குறிப்பிட்ட உத்தரவில் 1979 ஆம் ஆண்டு அரசாணைப்படி ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் எனவும், ஓய்வு பெற்ற அதிகாரிகள் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் டிஜிபிக்கு உத்தரவிட்டிருக்கிறார். ஆர்டர்லிகளை பயன்படுத்துவதாக புகார்கள் வந்தால், உடனே விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, காவலர் குடியிருப்பில் சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்களை கண்டறியவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருக்கிறாள். மேலும் காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்கின்ற மனுதாரர் மாணிக்கவேல் கோரிக்கை குறித்து தமிழக அரசை அணுகும்படி கூறியதோடு, இந்த வழக்கை எஸ் எம் சுப்பிரமணியன் முடித்து வைத்திருக்கிறார்.