Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர்…. திடீர் ராஜினாமா முடிவு….!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகராக இருப்பவர் மருத்துவர் அந்தோணி பாசி. கொரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாக அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த போது, தடுப்பூசி போடுவது உள்ளிட்ட மக்களை காக்கும் பணியில் அதிபருக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பில் சிறப்புடன் செயல்பட்டுள்ளார். இது குறித்து  அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் கூறியதாவது, “தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்க்கான மையத்தின் இயக்குனர் மற்றும் அதிபர் பைடனுக்கான தலைமை மருத்துவ ஆலோசகர் ஆகிய பதவிகளிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளேன்.

பதவியிலிருந்து வருகிற டிசம்பர் மாதத்தில் ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளேன். மேலும் இந்த பதவிகளிலிருந்து இந்த ஆண்டில் விலகி விட  முடிவு செய்துள்ளேன். 50 ஆண்டுகளுக்கும் கூடுதலாக அரசு பணியாற்றிய நிலையில், எனது தொழிலின் அடுத்த சகாப்தத்தில் தொடர திட்டமிட்டு இருக்கின்றேன். அதற்கான ஆற்றலும் தன்னிடம் உள்ளது. எனது துறையின் மீது பேரார்வமும் உள்ளது. மேற்கூறிய பணிகள் தனது வாழ்நாளில் கிடைத்த கவுரவம்” என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |