Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதலர் தின சிறப்பு : நாய்களுக்கு திருமணம்

நாடு முழுவதும் நாளை காதலர் தினத்தை கொண்டாட உள்ள நிலையில் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

நாடு முழுவதும் நாளை காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட காத்திருக்கும் வேளையில் இந்து  முன்னணி அமைப்பினர் காதலர் தினத்தை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் காதலர் தினத்தை எதிர்க்கும் விதமாக கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையத்தில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதற்காக வீட்டில் வளர்க்கப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்ட் ஆண் நாயும் மற்றொரு வீட்டில் வளர்க்கப்பட்ட பொம்மேரியன் பெண் நாயும் கொண்டுவரப்பட்டு இரண்டிற்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமண வைபவத்தை முடித்துவிட்டு கோவை மாவட்டம் பாரத் சேனா பொதுச்செயலாளர் கூறியிருப்பதாவது,

காதலர் தினம் என்ற பெயரில் பள்ளி கல்லூரி மாணவிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் காதலர் தினத்தை கண்டித்து நாங்கள் நாய்களுக்கு திருமணம் செய்துள்ளோம். எனக் கூறினார்

Categories

Tech |