Categories
கரூர் மாவட்ட செய்திகள்

புதிதாக வீடு கட்டிய ஊழியர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தனியார் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் பகுதியில் பூபதி(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா(28) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பூபதி புதிதாக வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடனை திரும்ப செலுத்த இயலவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த பூபதி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூபதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |