கடன் பிரச்சனையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் கே.சி.சி நகரில் லோகேஷ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேன் ஓட்டுனராக இருந்துள்ளார். இந்நிலையில் டிராவல்ஸ் தொழில் தொடர்பாக லோகேஷ் பல பேரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை. இதற்கிடையில் கடன் கொடுத்தவர்கள் லோகேஷிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த லோகேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லோகேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.