Categories
அரசியல்

சென்னை மக்களே….. ஒரு மினி சுற்றுலா போக ரெடியா?…. இதோ அதற்கான சிறப்பு மிக்க இடங்கள்…..!!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னை, தெற்கே பார்க்க வேண்டிய மிக அழகான நகரங்களில் ஒன்றாகும். இங்கு கண்ணுக்கு இனிய கடற்கரைகள் மற்றும் பழங்கால நகரங்கள் மட்டுமல்லாமல் வினோதமான மலைவாசஸ்தலங்கள்,பிரம்மிக்க வைக்கும் கட்டிடக்கலை மற்றும் அமைதியான இடங்கள் ஆகியவற்றால் சென்னை ஆசீர்வதிக்கப்பட்ட திகழ்கிறது.

அப்படிப்பட்ட சென்னையின் நகர வாழ்க்கையில் தினம் தோறும் சலசலப்புக்கு மத்தியில் ஏதாவது ஒரு நாள் ஒரு குறுகிய பயணத்தை திட்டமிடுவது பலருக்கும் விருப்பமாக இருக்கும். அப்படி சென்னையில் இருக்கும் பலரும் மிக விரைவில் அருகில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று வரலாம். அதன்படி சென்னைக்கு அருகே உள்ள சில சுற்றுலாத்தலங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

புலிகட் ஏரி:

சென்னையில் இருந்து வடக்கே சாலை மார்க்கமாக பயணித்தால் 2 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இந்த சிறிய கடற்கரையை சென்றடையலாம். இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் தடாகம் இங்குதான் அமைந்திருக்கின்றது. இங்கு புலி கட் சரணாலயம், டச்சு கோட்டை மற்றும் டச்சு கல்லறை ஆகிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அது மட்டுமல்லாமல் பிளமிங்கோ திருவிழாவை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு வருவார்கள்.

மகாபலிபுரம்:

ஏழாம் ஆண்டு நூற்றாண்டில் பல்லவ வம்சத்தால் கட்டப்பட்ட கோவில்களில் கட்டிடக்கலை நினைவுச் சின்னங்களாக அறியப்பட்ட மகாபலிபுரம் சென்னைக்கு அருகே 100 கிலோமீட்டர் தொலைவில் மிகவும் பிரபலமான மற்றும் யுனைஸ்கோ பாரம்பரிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு கடற்கரை கோவில், ஒற்றைக்கால் ஆகியவை கட்டிடக்கலைக்கு அழகான உதாரணங்கள். இங்கு உள்ளூர் பயணிகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு பயணிகளும் அதிகமாக வந்து செல்வார்கள்.

நாகலாபுரம் மலைகள்:

இந்தியா முழுவதிலும் இருக்கும் சாகச பயணம் மேற்கொள்பவர்கள் அனைவருக்கும் சிறந்த மலையேற்ற இடமாக இது திகழ்கிறது.சென்னையில் இருந்து 2 மணி நேர பயண தூரத்தில் இது அமைந்திருக்கின்றது. இங்கு ட்ரெக்கிங் செய்வது, டஜன் கணக்கான நீர்வீழ்ச்சிகளில் நனைவது,குளங்களில் நீராடுவது மற்றும் மலைகளின் மேல் இரவில் முகாம் இடுவது என வார இறுதி நாட்களை ஆனந்தமாக செலவழித்து செல்லலாம்.

காஞ்சிபுரம்:

சென்னையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணித்தால் ஒன்றரை மணி நேரத்தில் இந்த கோவிலை அடையலாம்.கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரத்தில் நிறைந்த நகரமாக திகழ்கிறது. காஞ்சி கைலாசநாதர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில்,காஞ்சிகுடில் அருங்காட்சியகம் மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் என வார இறுதியில் இங்கு பிரம்மாண்டமாக செலவிடலாம்.

சந்திரகிரி:

சென்னையிலிருந்து வெறும் மூன்று மணி நேரம் பயண தூரத்தில் அமைந்துள்ள இந்த சந்திரகிரி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. கோட்டைகள், அரண்மனைகள், ஏரிகள்,நீர்வீழ்ச்சிகள் மற்றும் அருங்காட்சியகங்கள் என அனைத்தும் இங்கு உள்ளன.

புதுச்சேரி:

சென்னையில் வார இறுதி நாட்களில் சட்டை என ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என நினைத்தால் அதற்கு சிறந்த இடம் புதுச்சேரி தான். இங்கு அவ்வளவு சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன. சென்னைக்கு அருகில் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். எனவே சென்னையில் இருப்பவர்கள் சுற்றுலா செல்ல விரும்பினால் அதுவும் குறைந்த நேரத்தில் இந்த இடங்களுக்கு சென்று குடும்பத்துடன் நேரத்தை செலவிடலாம்.

Categories

Tech |