தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரயில் மூலம் ஆயிரம் டன் நெல் வந்தடைந்தது.
ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்திற்காக பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து கோதுமை, அரசி, நெல் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 1000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இந்த நெல் மூட்டைகளானது 21 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயில் மூலம் ஈரோடு ரயில்வே பணிமனைக்கு நேற்று வந்தடைந்தது. இதையடுத்து வந்தடைந்த நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் லாரிகளில் ஏற்றப்பட்டு ஈரோட்டில் இருக்கும் நுகர் பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்பின் நெல் மூட்டைகள் அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரிசியாக மாற்றப்பட்டு பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.