இங்கிலாந்து நாட்டில் ஆளும் சோசியல் டெமாக்ரடி கட்சியின் பிரதமராக 36 வயது பெண்ணான சன்னா மரின் என்பவர் பதவி வகித்து வருகின்றார். கடந்த 2019 ஆம் வருடம் தனது 34 வயதில் பின்லாந்தில் பிரதமராக பதவியேற்றதன் மூலமாக உலக பிரதமர் எனும் பெருமையை இவர் பெற்றுள்ளார். இந்த சூழலில் சன்னா தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அதனை தொடர்ந்து அவரது பிரதமர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தனது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகமாக பாடி நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவை பார்த்த பலரும் சன்னா போதை பொருட்களை உட்கொண்டு நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டதாக குற்றம் சாட்டி விமர்சனம் செய்து வருகின்றார்கள். மேலும் குடிமக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய நாட்டின் பிரதமரே இவ்வாறு நடந்து கொள்வதா என எதிர் காட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது. அது மட்டுமல்லாமல் சன்னா போதை பொருட்களை பயன்படுத்தினாரா என்பதை பரிசோதிக்க வேண்டும் என்றும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட அவர் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றது.
இந்த சர்ச்சையினால் சன்னா மரின் பதவிக்கும் ஆளும் சோசியல் டெமாக்ரட் அரசுக்கும் கடுமையான நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இருந்தபோதிலும் விமர்சனங்களுக்கு பதில் அளித்து பிரதமர் சன்னா தான் எந்த போதைப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை எனவும் சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்யவில்லை என்றும் விளக்கம் அளித்து இருக்கின்றார். இது பற்றி அவர் பேசும்போது நான் எனது நண்பர்களுடன் இணைந்து பார்ட்டி தான் செய்தேன். மேலும் நான் எந்தவிதமான போதை பொருட்களையும் பயன்படுத்தவில்லை எனது தனிப்பட்ட வீடியோ பொதுவெளியில் பகிரப்பட்டு இருப்பதை நினைத்து நான் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றேன். ஆமாம் மாலை வேளையில் என் நண்பர்களுடன் இணைந்து பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கின்றேன் நடனம் ஆடினேன், பாட்டு பாடினேன், மது அருந்தினேன்.
ஆனால் நான் எந்த போதை பொருட்களையும் பயன்படுத்தவில்லை நான் செய்ததெல்லாம் சட்டத்திற்கு உட்பட்டது தான் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் தொடர்ந்து பேசும்போது போதை பொருள் தொடர்பாக பரிசோதனை மேற்கொள்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை அது போல் எனது நடத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கின்றேன். இப்போது இருப்பது போலவே இருக்க விரும்புகின்றேன் அது ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் கொரோனா தொற்று விதிமுறைகளை மீறி சன்னா இரவு நேர கேளிக்கை விடுதி சென்று பெரும் பொழுதை கழித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இதற்காக அவர் மன்னிப்பு கோரியதும் குறிப்பிடத்தக்கதாகும்.