ஆந்திரமாநிலத்தில் தனியாகவுள்ள பெண்கள் பலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடுத்தடுத்து கொலை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தபோது சந்தக ராம்பாபு என்பவர் சிக்கினார். இவருடைய மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு ஏற்பட்டு பிரிந்து சென்றதால் சைக்கோவாக மாறிய சந்தக ராம்பாபு, பெண்களை பழிவாங்கும் நோக்கில் இது போன்று கொலை மற்றும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து ஆந்திர காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அதாவது சந்தக ராம்பாபு இரும்பு கம்பியால் பெண்களை அடித்துக் கொலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.