Categories
தேசிய செய்திகள்

சபரிமலை ஐயப்பனுக்காக….. தங்க மாலையை காணிக்கையாக அளித்த பக்தர்….. எவ்வளவு சவரன் தங்கம் தெரியுமா?….!!!!

சபரிமலை ஐயப்பனுக்கு 107.75 பவுன் எடையுள்ள தங்க மாலையை பக்தர் ஒருவர் காணிக்கையாக அளித்துள்ளார்.

லேயர் டிசைன் நெக்லஸை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார். வெளிநாட்டில் உள்ள தொழில் செய்துவரும் குடும்பத்தைச் சேர்ந்த பக்தரான இவர், தொழிலாளர் செய்கூலிக் கட்டணம் உட்பட ரூ.44 லட்சத்து 98,600 மதிப்புள்ள தங்க நகையை சமர்பித்தார்.

தனது வேண்டுதல் நிறைவேறி நல்ல லாபம் கிடைத்ததால், சபரிமலை ஐயப்பனுக்கு இந்த காணிக்கையை அளித்திருப்பதாக பக்தர் கூறியுள்ளார். ஐயப்பன் சிலைக்கு இந்த மாலையை அணிவித்த பின், பக்தர்கள் அதனை கண்டு வழிபாடு செய்தபின் மலையிலிருந்து கீழே இறங்கினர்.

Categories

Tech |