வடகிழக்கு ஆப்பிரிக்காவில் முதன் முறையாக சீனா தனது கடற்படை தளத்தை திறந்து உள்ளது. ஜிபூட் நாட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.4,700 கோடி செலவில் சீனா கடற்படை தளம் அமைக்க தொடங்கியது. இதன் பணிகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது திறக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்தியாவின் செயற்கைக்கோள்களை சீனா நேரடியாக கண்காணிக்க முடியும் என்றும் இலங்கையில் உள்ள சீன உளவு கப்பல் அதற்கு உதவும் என்றும் கூறப்படுகிறது.
சீனாவின் இந்த கடற்படை தளம் அதன் முதல் வெளிநாட்டு ராணுவ தளமாகும்.இந்திய பெருங்கடல் பகுதியில் சீன ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து வரும் நிலையில் தற்போது நிறுவப்பட்டிருக்கும் இந்த கடற்படை தளம் சீனாவின் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. சீனா உலகம் முழுவதும் அதனுடன் நட்பு கொண்டுள்ள நாடுகளில் தன்னுடைய ராணுவ தளத்தை அமைக்க இன்னும் நாட்டம் காட்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.