Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“அதனை ரத்து செய்ய வேண்டும்” குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

மின்வாரிய ஊழியர் குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு முன்பு 4 பேர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் தர்ணாவில் ஈடுபட்டவர்கள் சோமண்டாபுதூர் தெற்கு தெருவை சேர்ந்த கணேசன்(48), அவரது மனைவி அஞ்சலை, மகன் இன்பராஜ், மகள் மகேஸ்வரி என்பது தெரியவந்தது. இதில் கணேசன் எசனை மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் கம்பியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் மின்சார பிரச்சனை காரணமாக கணேசனை ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து எசனை உதவி மின் பொறியாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேளூர் மின்வாரிய அலுவலகத்திற்கு கணேசை பணியிட மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. எனவே மேற்பார்வை பொறியாளர் தலையிட்டு பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி கணேசன் தனது குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |