Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிளஸ் 2 மாணவர் கொலை…. 2 நண்பர்கள் கைது… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!!!

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள 17 வயது மாணவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் போதே பழக்கத்திற்கு அடிமையாகி பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தை அன்று அந்த மாணவர் கஞ்சா போதையில் பள்ளி அருகில் உள்ள நூலகத்தின் முன் படுத்திருந்தார். அப்போது அவருடைய நண்பர்கள் அவரை எழுந்து வீட்டிற்கு செல்லுமாறு வற்புறுத்தினர் இதனால் அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போதையில் இருந்த மாணவரை அவரது நண்பர்கள் தாக்கியுள்ளனர். அப்போது மாணவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனை பார்த்த சக மாணவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், நண்பர்கள் தாக்கியதில் பிளஸ் டூ மாணவர் இறந்ததாக தெரியவந்தது. அதனை தொடர்ந்து பிளஸ் 2 மாணவரின் நண்பரான 17 வயது சிறுவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர் மேலும் இரண்டு பேரை வலைவீசி தேடி வருகின்றனர். அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், எங்களது நண்பர் கஞ்சா மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். சம்பவத்தன்று நாங்கள் அனைவரும் சேர்ந்து மது அருளினம். போதை அதிகமானதும் அவர் எங்களிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் அவரை வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தினோம். ஆனால் அவர் தொடர்ந்து தகறாறில் ஈடுபட்டார். இதனால் அருகில் இருந்த கட்டையால் தாக்கினோம். இதில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனே நாங்கள் 4 பேரும் தப்பிச் சென்றுவிட்டோம் . அதன் பிறகு தான் அவர் இறந்ததை தெரியவந்தது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |