Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென பெய்த மழை!…. ஏரிகளுக்கு 70 கன அடி நீர்வரத்து….. வெளியான தகவல்….!!!!

சென்னை மாநகராட்சிக்கு சோழவரம், பூண்டி, புழல், கண்ணன் கோட்டை-தேர்வாய்கண்டிகை, செம்பரம் பாக்கம் போன்ற ஏரிகளுடன் வீராணம் ஏரியிலிருந்தும் நீர் பெறப்பட்டு குடிநீர்விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் 1071.61 மில்லியன் லிட்டர் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இப்போதைய சூழ்நிலையில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் 9 ஆயிரத்து 177 மில்லியன் கன அடி (9.17 டி.எம்.சி.) இருப்பு இருக்கிறது. இந்நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று மழை பெய்தது.

அதிலும் குறிப்பாக பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் 22 மில்லி மீட்டரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 34.8 மி.மீ., தாமரைப்பாக்கம் 5 மி.மீ., கொளத்தூர் அணைக்கட்டு 33 மி.மீ., மீனம்பாக்கம் 30.6 மி.மீ. என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது. இதன் வாயிலாக ஏரிகளுக்கு வரத்து கால்வாய் வழியே 70 கனஅடி நீர் வந்துள்ளது. சென்ற வருடம் இதே காலக்கட்டத்தில் 9 டி.எம்.சி. நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது என நீர்வளத்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |