தமிழ் சினிமாவில் 1985 ஆம் ஆண்டு வெளியான கல்யாணம் அகதிகள் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நாசர். அதன் பிறகு இவர் நாயகன், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன், குருதிப்புனல், பம்பாய் பாகுபலி, உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிகர் இயக்குனர், தயாரிப்பாளர், பின்னனி பாடகர், டப்பிங் கலைஞர், நடிகர் சங்கத் தலைவர் என பன்முக திறமையை கொண்டவர். இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கானா போலீஸ் அகடாமியில் நடைபெற்றது. அப்போது படப்பிடிப்பு முடிந்து படிக்கட்டுகளில் அவர் இறங்கி வந்த போது கால் வலிக்கு கீழே விழுந்ததில் நாசருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நாசரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டிருப்பதாகவும் விரைவில் குணமடைந்து விடுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.