தமிழ் சினிமா திரையரகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் இணைப்பில் நடிகர் தனுஷ் உள்ளார். அந்த வகையில் செல்வராகவனின் நானே வருவேன் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி, மித்திரனின் திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை மிகவும் நம்பி இருக்கின்றார் தனுஷ்.
இந்த நிலையில் யாரடி நீ மோகினி எனும் வெற்றி படத்தை இயக்கிய மித்ரன் பல வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் மூலமாக ஏழு வருடங்கள் கழித்து அனிருத் மற்றும் தனுஷ் இணைந்து இருக்கின்றார்கள். இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கின்றது. தனுஷின் படம் பல மாதங்கள் கழித்து திரையில் வெளியாகினால் ரசிகர்கள் இந்த படத்தில் முதல் காட்சியை காண ஆவலாக இருந்தனர். அதன்படி இந்த படத்தின் முதல் காட்சி ஆரம்ப நிலையில் திரையரங்குகளை தனுஷ் ரசிகர்கள் திருவிழாவாக மாற்றியுள்ளார்கள்.
மேலும் அவர்களை மகிழ்விக்கும் விதமாக தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் ரசிகர்களுடன் திருச்சிற்றம்பலம் படத்தை காண திரையரங்கிற்கு வந்திருக்கின்றனர். அவர்களை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவர்களை வரவேற்றுள்ளனர். மேலும் இதுவரை வெளியான விமர்சனங்கள் அனைத்தும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு சாதகமாக வந்திருப்பதனால் இந்த படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு தனுஷ் திரும்பி இருக்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.