தரக்குறைவான பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ததற்காகவும் நுகர்வோர் உரிமைகளை மீறியதற்காகவும் flipkart நிறுவனத்திற்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக மத்திய நகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை ஆனையர் நிதி காரே கூறியுள்ளார். flipkart நிறுவனம் 598 தரகுறைவான பிரஷர் குக்கரில் விற்பனை செய்திருப்பதாக தெரிகின்றது. அதனால் இந்த 598 பிரஷர் குக்கர்களையும் வாங்கிய நபர்களுக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக பிரஷர் குக்கர்களை திரும்ப பெற்று பணத்தை அவர்களிடம் திருப்பி செலுத்தும் படி நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது.
இது பற்றி 45 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் பிளிப்கார்டு நிறுவனத்திற்கு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும் தரக்குறைவான பொருட்களை பயன்படுத்துவதனால் பயனாளிகளுக்கு காயம் அல்லது வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்படலாம். அதனால் தரக்குறைவான பொருட்களை விற்பனை செய்யப்படுவது பற்றி நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கண்காணித்து வருகின்றது. இந்த நிலையில் மேற்கூறிய தர குறைவான பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ததன் வாயிலாக பிளிப்கார்ட் நிறுவனம் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 263 ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளது. இதனை எல்லாம் கருத்தில் கொண்டு பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது.