Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 2 ஏவுகணைகள்…. வட கொரியாவின் அட்டுழியம்…. லீக்கான தகவல்….!!!!

வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றவேண்டும் என்று அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகள் முயற்சித்து வருகிறது. எனினும் தங்களது நாட்டின் மீதான பொருளாதார தடைகளை முழுமையாக திரும்பபெறாத வரை அணு ஆயுதங்களை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்பதில் வட கொரியா உறுதியாக இருக்கிறது. மேலும் பொருளாதார தடைகளை திரும்பப் பெறுவதற்கு அமெரிக்காவுக்கும், தென் கொரியாவுக்கும் அழுத்தம் கொடுக்கும் அடிப்படையில் வட கொரியா அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது.

இந்நிலையில் வட கொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயாராகும் விதமாக அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் படைகள் கொரிய தீபகற்பத்தில் அடுத்த வாரம் மிகப் பெரிய கூட்டுப் போர் பயிற்சியை துவங்க உள்ளதாக இரு நாடுகளும் நேற்று முன்தினம் அறிவித்தது. இந்த சூழ்நிலையில் வட கொரியா நேற்று ஒரேநாளில் 2 ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

இதுபற்றி தென் கொரியா இராணுவம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “தலை நகர் பியாங்யாங் அருகில் மேற்கு கடலிலிருந்து 2 கப்பல் ஏவுகணைகளை ஏவியதை கண்டறிந்தோம். இந்த சோதனை தொடர்பான கூடுதல் விபரங்களை அமெரிக்கா மற்றும் தென் கொரிய அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது. தென் கொரியாவின் அதிபராக யூன்சுக் யோல் பதவியேற்று நேற்றுடன் 100 நாட்கள் நிறைவைடைந்த நிலையில், வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |