ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூலில் உள்ள மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை அடுத்து, அந்நாட்டில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை படிப்படியாக கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை அடுத்து முழுவதுமாக கைப்பற்றிய தலிபான்கள் தற்போது அங்கு ஆட்சி செய்து வருகின்றனர்.. இந்த ஆட்சி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அந்நாட்டில் அடிக்கடி குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறி பல உயிரிழப்புகள் நிகழ்கின்றன.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை மாலை தொழுகையின் போது காபூலில் உள்ள மசூதியில் குண்டு வெடித்ததில் 60 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால் இந்த குண்டுவெடிப்பில் 30 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 40 பேர் காயமடைந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.. நகரின் 17வது மாவட்டமான வடக்கு காபூலில் வெடிகுண்டு வெடித்ததாக மசூதிக்குள் ஒரு குண்டுவெடிப்பு நடந்தது…. குண்டுவெடிப்பில் பலியாகியுள்ளனர், ஆனால் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று தலிபானின் காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இதையடுத்து தலிபான் படைகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர், ஆனால் எத்தனை பேர் என்று கூறவில்லை.. ஆனால் 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய தொலைக்காட்சி நெட்வொர்க் TV9 தெரிவித்துள்ளது.
காபூல் மருத்துவமனையான எமர்ஜென்சி என்ஜிஓ ட்விட்டர் பக்கத்தில், ‘பிடி 17 பகுதியில்’ வெடித்ததைத் தொடர்ந்து இதுவரை 27 பேர் எங்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 5 குழந்தைகள், 7 வயது குழந்தை உட்பட” என்று தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஸ் அமைப்பு காரணம் என தலிபான் குற்றச்சாட்டியுள்ளனர்.
முன்னதாக கடந்த வாரம் காபூலில் தற்கொலைப்படை குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில், தலிபான்களை ஆதரித்த ஒரு முக்கிய ஆப்கானிய மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கான் கொல்லப்பட்டார். முன்னதாக மதகுருவை குறிவைத்த இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) குழு, அவரது அலுவலகத்திற்குள் நடந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றது.
அதற்கு முன், ஆகஸ்ட் 8 அன்று, ஆப்கானிஸ்தான் தலைநகரில் ஒரு பரபரப்பான கடை வீதியில் குண்டுவெடிப்பு நடந்தது, குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 22 பேர் காயமடைந்தனர். சிறுபான்மை ஷியா முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் வழக்கமாக சந்திக்கும் நகரின் மேற்கு மாவட்டத்தில் குண்டு வெடித்தது. இந்த தாக்குதலுக்கு சன்னி முஸ்லிம் தீவிரவாத அமைப்பான இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
🔴 #Afghanistan #Kabul: 27 people received at our hospital so far following an explosion in the PD17 area. 5 children among them, including a 7-year-old.
— EMERGENCY NGO (@emergency_ngo) August 17, 2022
https://twitter.com/WaliKhan_TK/status/1559996492181651456