புதிய மின்மாற்றியை முதல்வர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து 150 கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் பழைய மின்மாற்றி சீரமைக்கப்பட்டு புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றியை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ மணிக்கண்ணன் கலந்து கொண்டார். இவர் பூஜைகள் முடிவடைந்த பிறகு மின்மாற்றியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். மேலும் நிகழ்ச்சியில் மின்வாரியத்தை சேர்ந்த பிரசாத், எழிலரசன், கோபிநாத், சிவராமன், சுப்புராஜ், சர்தார் உள்ளிட்ட ஊழியர்கள் உடன் இருந்தனர்.